உள்நாட்டு செய்திகள்புதியவை

தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும்: ஹரீஸ்

தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டாம் என வலியுறுத்தி சத்தியாக்கிரக போராட்டம் கடந்த நான்கு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு குறித்த போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

சம்பந்தப்பட்ட பிரச்சினையில் எங்களுக்கான நியாயங்கள் சட்ட ரீதியாக உள்ளது. இதனை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் நம்பிக்கை உள்ளது எனவும் அவர் கூறினார்.

தயவு செய்து நூற்றாண்டுகாலமாக இருந்து தமிழ், முஸ்லிம் மக்களின் இன நல்லுறவை சீர்குலைக்க வேண்டாம் என அரசியல்வாதிகளுக்கு உருக்கமான வேண்டுகோளையும் அவர் விடுத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க