உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

வவுனியாவில் ‘புளொட்’ அமைப்பின் பேராளர் மாநாடு

வவுனியாவில் தமிழீழ விடுதலை கழகத்தின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் 9 வது பேராளர் மாநாடு இன்று இடம்பெற்றது.

‘புளொட்’ அமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் இம்மாநாடு இடம்பெற்றது.

வவுனியா கோவில்குளம் சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள ஆதி திருமண மண்டபத்தில் நடைபெற்ற பேராளர் மாநாட்டில் வடக்கு கிழக்கு பகுதியை சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அமைப்பின் தலைவர் மங்கள விளக்கேற்ற உயிரிழந்த தோழர்களுக்கான மௌன அஞ்சலியுடன் போராளர் மாநாடானது ஆரம்பமாகியிருந்தது.

இதேவேளை புளொட் அமைப்பின் 9 வது பொதுச்சபை கூட்டமானது நேற்றைய தினம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க