உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த ஏற்படுத்தப்படும் தடைகளுக்கு கண்டனம்

கல்முனை பிரதேச செயலகத்தினை முழுமையான அதிகாரத்துடனான செயலகமாக மாற்ற எடுக்கும் முயற்சிகளுக்கு ஏற்படுத்தப்படும் தடைகளை வன்மையாக கண்டிப்பதாக புளொட் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வவுனியாவில் இடம்பெற்ற பேராளர் மாநாட்டில் இவ்வாறு கண்டனம் வெளியிடப்பட்டதோடு மேலும் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

முழுமையான அதிகாரத்துடனான பிரதேச செயலகமாக மாற்றுவதற்கு தமிழர் தரப்பில் கடந்த முப்பது வருடகாலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

இதற்கு ஏற்படுத்தப்படும் தடைகளை வன்மையாக கண்டிப்பதோடு, தரமுயர்த்துவதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவது என தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் 9 ஆவது பேராளர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க