உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்

புண்ணியகர்ம நிகழ்வு-தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

ஜனாதிபதி செயலக ஏற்பாட்டில் நாட்டிற்கு இறையாசி வேண்டி மட்டக்களப்பில் புண்ணியகர்ம நிகழ்வு உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக முன்றலில் நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றது.

இதன் போது இலங்கைக்கு எதுவித அச்சுறுத்தலும் இனிமேல் இடம்பெறகூடாதென 21 தடைவை சத்தியப்பிரமாண நிகழ்வும் மும்மத தலைவர்களின் ஆசிர்வாத உரையும் உயிரிழந்தவர்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி 2 நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அத்துடன் ஈகைச் சுடர் ஏற்றி வழிபாடுகளும் நினைவுரைகளும் இங்கு இடம்பெற்றன.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார் கலந்து கொண்டார். மற்றும் மும்மதத் தலைவர்கள் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க