உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்

யுத்தத்தில் அழிந்த உன்னிச்சை புனித அந்தோனியார் ஆலயப்பணிகள் ஆரம்பம்

மட்டக்களப்பு- உன்னிச்சை பகுதியில் கடந்த 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தினால் அழிவடைந்த புனித அந்தோனியார் ஆலயத்தினை மீள கட்டுவதற்காக அடிக்கல் நடப்பட்டது.

ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா ஆலய அருட்தந்தை அன்ரனி டிலிமா தலைமையில் இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றது .

இதில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், மண்முனை மேற்கு பிரதேச உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், பிரதேச சபை உறுப்பினர் சண்முகம் குகநாதன், உன்னிச்சை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி, ஆயித்தியமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

உன்னிச்சை, நெடியமடு கிராமத்தில் அமைந்துள்ள இவ்வாலயத்தில் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன் அங்குள்ள மக்கள் தமது வழிபாடுகளை மேற்கொண்டு வந்தனர்.

கருத்து தெரிவிக்க