உள்நாட்டு செய்திகள்புதியவை

கல்முனையில் முஸ்லிம் சமூகம் முன்னெடுத்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கூடாது எனக் கோரி முஸ்லிம் தரப்பால் மேற்கொள்ளப்பட்டுவந்த சத்தியாகிரகம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

கடந்த 3 நாட்களாக இடம்பெற்ற இந்த சத்தியாகிரக போராட்டம் , 4ஆவது நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்போது, மௌலவிமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், நகரசபை, பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தங்கள் ஆதரவினை வழங்கியிருந்தனர்.

கருத்து தெரிவிக்க