உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

யாழ்.மாநகர சபை உறுப்பினர்களாக புதியவர்கள் இருவர் பதவியேற்பு!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட இருவர் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டுள்ளனர்.

யாழ்.மாநகர சபைக்கு தெரிவான அஜந்தா தனபாலசிங்கம் மற்றும் சுகந்தினி சிறிகரன் ஆகியோர் கடந்த மே மாதம் தமது உறுப்பினர் பதிவியை சுயவிருப்பில் இராஜினாமா செய்தனர்.

இதனையடுத்து, ஏற்பட்ட இரு வெற்றிடங்களுக்கு அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட டெய்சி பிலீப் ஜெயரஞ்சன், தர்சிபா லவகீசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரின் பெயர்களும் தேர்தல் ஆணையாளருக்கு பரிந்துரைக்கப்பட்டதையடுத்து, இருவர்களின் பெயர்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சபையின் அடுத்த அமர்வில் இருவரும் சத்தியபிரமாணம் செய்து உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க