உள்நாட்டு செய்திகள்புதியவை

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரிய போராட்டம் தற்காலிகமாக முடிவு!

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மதத்தலைவர்களும் அரசியல் தலைவர்களும் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் மீண்டும் சாகும்வரையான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

பௌத்த, இந்து மற்றும் கிருஸ்த்தவ மதத் தலைவர்கள் தலைமையில் இந்தப் போராட்டம் கடந்த 17 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கருத்து தெரிவிக்க