உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியாவில் இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர்

நைனமடு-நெடுங்கேனி பகுதியில் இருந்து வவுனியாவுக்கு வந்த தனது இரண்டு மகன்களும் காணாமல் போயுள்ளதாக தந்தை ஒருவர் வவுனியா பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.

19 வயது இளைஞர் விஜயசுந்தர தர்சன் , 16 வயது மாணவர் விஜயசுந்த நிதர்ஷன் கடந்த வியாழக்கிழமை (ஜூன் 20) முதல் காணாமல் போயுள்ளனர்.

வவுனியாவுக்கு சென்ற நாளில் இருந்து அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று அவர்களின் தந்தை தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்கள் குறித்த தகவல்கள் கிடைப்பவர்கள் 0775415912 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தகவல் தெரிவிக்குமாறு குறித்த தந்தை பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க