வடக்கு செய்திகள்

வவுனியாவில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு ஒன்று கூடல்

சதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்கும் ஒன்றுகூடல் இன்று காலை 9.30 மணிக்கு வவுனியா தனியார் விடுதியொன்றில் நடை பெற்றது.

இந்த ஒன்றுகூடலில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், கிராம மட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள், மற்றும் அரச உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விரிவான விளக்கங்களுடன் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் அகமட் மனாஸ் இலஞ்ச ஊழலை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதியாரி சுமேந்தர, கபோ அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் ஆர் மனோராஜ் உதவித் தேர்தல் ஆணையாளர் ஜெனிற்றன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க