வெளிநாட்டு செய்திகள்

சீனாவில் நிலநடுக்கம் 19 பேர் பாதிப்பு :

சீனாவின் தென் மேற்கே சிச்சுவானில்  காங் சியான் கவுண்டி பிரதேசத்தில் நேற்றிரவு 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் சீன அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் , நிலநடுக்கத்தால் 19 பேர் காயமடைந்திருப்பதாகவும் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை சிச்சுவானின் சாங்னிங் கவுண்டியில் 6.0 என்ற அளவிலும் காங் கவுண்டியில் 5.1 என்ற அளவிலும் நிலநடுக்கம் பதிவானது. இதன்போது 13 பேர் கொல்லப்பட்டனர்.

கருத்து தெரிவிக்க