சினிமா

பரபரப்பாக இடம்பெறும் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் வீதியில்  உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெறுகிறது.

தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த தேர்தலை பாண்டவர் அணி, சுவாமி சங்கரதாஸ் அணி என இரு அணிகளாக பிரிந்து திரையுலகினர் சந்திக்கின்றனர். தேர்தலை முன்னிட்டு நடிகர், நடிகைகள் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்திற்கு காலை முதல் செல்ல தொடங்கியுள்ளனர்.

தேர்தலில் வாக்களித்த பின் நடிகர், நடிகைகள் செய்தியாளர்களுக்கு பரபரப்பு பேட்டியளித்து உள்ளனர். நடிகர் சங்க தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவாக வாய்ப்பு உள்ளதென நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

நடிகர் சங்கத்திற்கான தேர்தல் பல தடைகளை தாண்டி நடைபெறுகிறது. ஜனநாயக முறையில் அனுமதியளித்த நீதித்துறைக்கும், காவல் துறைக்கும் நன்றி என நடிகை ரோகிணி தெரிவித்து உள்ளார்.

தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும். அனைவரும் வந்து வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் ஆரியா கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க