உள்நாட்டு செய்திகள்புதியவை

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டில் தொடரும் மழையுடனான காலநிலையை அடுத்து 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இது குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பகுதிகளிலுள்ள மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என அந்த நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் சிரேஷ்ட ஆய்வாளர் கலாநிதி வசந்த சேனாதீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க