உள்நாட்டு செய்திகள்புதியவை

பொதுஜன பெரமுனவால் புதிய செயலி அறிமுகம்!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால் புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

இந்த செயலி ஊடாக மக்களின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல்  பிரச்சினைகள் குறித்து தகவல் வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், மக்களை இலகுவாக சென்றடையக்கூடிய அரசியல் ரீதியான நடவடிக்கைகளை இதனூடாக முன்னெடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய தொழினுட்பத்தைப் பயன்படுத்தி இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கருத்து தெரிவிக்க