உள்நாட்டு செய்திகள்புதியவை

போக்குவரத்துச் சபைக்கு இரண்டு நாளில் 79 மில்லியன் ரூபாய் வருமானம்!

பஸ்களை விஷேட சேவையில் ஈடுபடுத்தியதன் காரணமாக இலங்கை போக்குவரத்துச் சபை 79 மில்லியன் ரூபாய் வருமானம்  கிடைத்துள்ளது.

ரயில்வே ஊழியர்கள் நேற்றும் நேறைக்குமுன்தினமும் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்த நிலையில், விஷேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இது குறித்து கருத்து தெரிவித்த அந்த சபையின் பிரதி பொதுமுகாமையாளர் டி.எச்.ஆர்.டி. சந்திரசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த காலப்பகுதியில் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டு, சேவைகள் வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க