உள்நாட்டு செய்திகள்புதியவை

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம் இன்று முதல் ஆரம்பம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கு அமைய தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாகிறது.

இதன்படி, இன்று தொடக்கம் எதிர்வரும் முதலாம் திகதிவரை பல்வேறு போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத கடத்தல்களுக்கு எதிரான தினத்தையொட்டி தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், நாடளாவியரீதியில் ஒன்பது பிரதான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க