உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

தேயிலை கன்றுகளை மானிய விலையில் பெற்றுக் கொள்ள உதவும் திட்டம்!

தேயிலை கன்றுகளை மானிய விலையில் பெற்றுக் கொள்ள உதவு தொகை வழங்கும் நிகழ்வு பெருந்தோட்ட கைத்தொழில் பதில் அமைச்சர் வடிவேல் சுரேஸ் தலைமையில் கண்டி பிலிமத்தலாவ தெம்பிலிகல விகாரையில் நடைபெற்றது.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படும் சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்களின் அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இதன்படி, விசேட வழிபாடுகளுடன் தேயிலை கன்றுகளை நாட்டி ஆரம்பித்து வைக்கபட்டது. இதன் போது கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மகேன் திசாநாயக்க சிறுதேயிலை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் உட்பட அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க