உள்நாட்டு செய்திகள்புதியவை

இந்திய உளவுத்துறையுடன் இணைந்து செயற்படுவதாக இராணுவம் தெரிவிப்பு!

இந்திய உளவுத்துறையுடன் இணைந்து செயற்படுவதாக இலங்கை இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாதுருஓய விஷேட படை பயிற்சிப் பாடசாலையின் நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கை இராணுவத்திற்கு அதி விசேடமான தைரியமுள்ள அதிகாரிகள் மற்றும் வீரர்கள் மாதுருஓய விஷேட படை பயிற்சிப் பாடசாலையால் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த தலைமைதத்துவம் காரணமாக யுத்தத்தின் போது பல வெற்றிகளை பெற்றுக்கொள்ள முடிந்ததாகவும் இராணுவத்தளபதி மஹேஷ் சேனாநாயக்க குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க