உள்நாட்டு செய்திகள்புதியவை

வாக்காளர் பெயர் பட்டியலை துரிதப்படுத்த கோரிக்கை!

வாக்காளர் பெயர் பட்டியலை புதுப்பித்து துரிதப்படுத்தி வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

விண்ணப்பப்படிவங்களை உடனடியாக பூர்த்தி செய்து கிராம உத்தியோகத்தர்களிடம் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன், வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ள தகவல்களை சரியான முறையில் பதிவு செய்து வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மாகாண சபை தேர்தலை நடத்தப்படுவது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் பட்சத்தில் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டி ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க