உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதாந்த கொடுப்பனவு

போரினால் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களிற்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள மக்கள் நலன் காப்பகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் வடமாகாண முதல்வர் சி வி விக்னேஸ்வரன் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உதவிகளை வழங்கி வைத்தார்.

யுத்தத்தில் உயிரிழந்த மாவீரர்களின் பெற்றோர் 30 பேருக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டதுடன், உலர் உணவு பொதிகளும் நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இவ்வாறான குடும்பங்களிற்கு மக்கள் நலன் காப்பகம் மற்றும் புலம்பெயர் உறவுகள் பலரும் உதவ முன்வந்துள்ளமையை சிவி விக்னேஸ்வரன், பாராட்டினார்.

இதேவேளை யுத்தத்தினால் சிதைக்கப்பட்ட ஏழைகளின் வீடுகள் உள்ளிட்டவற்றை சீர்செய்து கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

கருத்து தெரிவிக்க