உள்நாட்டு செய்திகள்புதியவை

கள்ள நோட்டுகளைப் பயன்படுத்தி நகை வாங்க முயன்றவர் கைது

கள்ள நோட்டுகளைப் பயன்படுத்தி நகைகளை வாங்க முயன்ற நபர் கெக்கிராவையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

26 வயதான குறித்த சந்தேகநபர், ஏழு, 5000 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் நகைகளை வாங்க முயற்சித்த நகைக் கடை ஊழியர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கருத்து தெரிவிக்க