உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

அதிபரை இடைநிறுத்துமாறு ஆளுநர் பணிப்பு

பருத்தித்துறை புனித தோமையார் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் அதிபரை உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வடமாகாண கல்வியமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த பாடசாலை மாணவி ஒருவர் அதே பாடசாலையின் ஆசிரியரினால் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக, குறித்த மாணவியின் பெற்றோர் அதிபருக்கு முறையிட்டும், அதிபர் பொலிசாருக்கு அறிவிக்காமல் இந்த சம்பவத்தினை மூடிமறைக்க முயற்சித்தாரென விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் குறித்த பாடசாலையின் அதிபரை உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிக இடைநிறுத்தம் செய்வதற்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளதுடன் மேலதிக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு விசாரணைக் குழுவொன்றினையும் நியமிக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குறிப்பிடப்படும் குறித்த ஆசிரியரும் விசாரணைகள் முடியும்வரை சேவையிலிருந்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க