வடக்கு செய்திகள்

யாழ்.கன்னாதிட்டி ஒழுங்கைகளினூடாக கனரக வாகனங்கள் செல்ல தடை

யாழ். நகரை அண்டிய கன்னாதிட்டி வீதியில் அமைந்துள்ள கன்னாதிட்டி ஒழுங்கைகளினூடாக கனரக வாகனங்கள் செல்வதற்கு யாழ். மாநகர முதல்வரினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள சில தனியார் வியாபார நிறுவனங்கள் தமது பொருட்களை ஏற்றி இறக்குவதற்காக கன்னாதிட்டி ஒழுங்கைகளைப் பயன்படுத்தி வந்ததனால் அந்தப் பகுதியிலுள்ள குடியிருப்பாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்கியிருந்தனர்.

வீதிகளின் அளவை விடப் பெரிய வாகனங்களில் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதனால் வீதி பாதிப்படைந்ததோடு, வீதியோரமிருந்த வாய்க்கால்களும் முற்றாக உடைந்து போயிருந்தன.

இந்நிலையில் குறிப்பிட்ட இரு ஒழுங்கைகளினூடாக கனரக வாகனங்கள் செல்வதைத் தடை செய்யும் வகையில் மாநகர முதல்வரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க