உள்நாட்டு செய்திகள்புதியவை

வர்த்தமானி அறிவித்தல் வரும் வரை போராட்டம் முன்னெடுக்கப்படும்

கல்முனை போராட்டத்தை பார்வையிட சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தூதுக்குழுவின் கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் வர்த்தமானி அறிவித்தல் வரும் வரையில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்கள்.

கோரிக்கை முறைப்படி நிறைவேறும் வரை தமது போராட்டம் தொடரும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் மற்றும் பொது மக்கள் போராட்டத்தைமுன்னெடுத்து வருகின்றனர் .

இதேவேளை இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி முஸ்லிம்கள் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க