உள்நாட்டு செய்திகள்புதியவை

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன மீது முறைப்பாடு

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன மீது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முறைப்பாடு பதிவு செய்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைமைப் பொறுப்பில் பங்கு வகிக்கும் அமைச்சர் ராஜித குறித்த பதவியை தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சுமத்தியே இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பதவியை தமது அரசியல் நலனுக்காக பயன்படுத்துவதாக மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று முன்வைத்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் உலக சுகாதார அமைப்பின் சான்றிதழ் பெறாத புற்று நோய் மருந்துக்களை விநியோகித்தல் உட்பட அமைச்சர் ராஜித மீது காணப்படும் பல்வேறு குற்றங்கள் தொடர்பிலும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்து தெரிவிக்க