வடக்கு செய்திகள்

பொது வீதி அபகரிப்பை எதிர்த்து யாழில் போராட்டம்

யாழ்.நகரப் பகுதியில் உள்ள பொது வீதி அபகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த போராட்டம் நாளை 10 மணிக்கு  யாழ்.நகரப் பகுதி காங்கேசன்துறை வீதியில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.நகரின் மத்தியில் அமைந்துள்ள கடை தொகுதிகளின் மத்தியில் குறித்த வீதி காணப்பட்டது. அதனை வீதிக்கு அருகில் உள்ள கடை உரிமையாளர் சட்ட விரோதமான முறையில் அபகரித்து தனது கடையுடன் இணைத்துள்ளார். இதனால் அவ்வீதியில் போக்குவரத்து செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சட்டவிரோத அபகரிப்பு தொடர்பில் சகல ஆவணங்களும் இருக்கின்ற நிலையில் மாநகர சபை நிர்வாகம் அதற்கு எதிரான நடவடிக்கை எடுக்க தவறி வருகின்றது.

இதன் காரணமாகவே அபகரிக்கப்பட்ட குறித்த வீதி மீண்டும் மக்களுடைய பொது பாவனைக்காக திறந்து விட கோரி போராட்டம் நடத்தப்படவுள்ளது என மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க