உள்நாட்டு செய்திகள்

ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது

பாணந்துறை வடக்கு பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்  கெசல்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் என குறிப்பிடப்பட்டுள்ளது .

சந்தேகநபரிடமிருந்து 02 கிராமும் 320 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் வீரகுல பிரதேசத்தில் 03 கிராமும் 05 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.

கருத்து தெரிவிக்க