உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

பெண்ணிற்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை-ரிஸாட் பதியூதீன்

பெண்ணிற்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று முன்னாள் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஸாட் பதியூதீன் தெரிவித்தார்.

தெமட்டகொடவில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணிற்கும் முன்னாள் அமைச்சர் ரிஷாட்டிற்கும் இடையே குடும்ப உறவுமுறை இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அண்மையில் நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு இன்றைய தினம் கூடிய நாடாளுமன்றத்தில் பதிலளித்த முன்னாள் அமைச்சர் பதியூதீன், இப்படியான தொடர்பு இருப்பதை விமல் வீரவன்ச ஆதாரங்களுடன் நிரூபித்தால் தாம் அரசியலிலிருந்து விலகிவிடுவதாக சவால் விடுத்தார்.

ஆனால் அவற்றை நிரூபிக்கத் தவறினால் விமல் வீரவன்ச அரசியலிலிருந்து விலகவேண்டுமென்றும் தெரிவித்தார்

கருத்து தெரிவிக்க