உள்நாட்டு செய்திகள்புதியவை

புத்தர் சிலை சேதம்-மாத்தறை வெளிகமையில் பதற்றம்

மாத்தறை வெளிகம பிரதேசத்தில் வீதியோரத்தில் காணப்பட்ட புத்தர் சிலை சில விஷமிகளால் கல்லெறிந்து சேதமாக்கப்பட்டதை அடுத்து தற்போது அங்கே பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

காலி – மாத்தறை பிரதான வீதியின் வெலிகம ரெஸ்ட் ஹவுஸ் வீதியில் இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

சுமார் 100 வருடங்கள் பழைமைவாய்ந்த புத்தர் சிலையே இவ்வாறு கல்லெறிந்து சேதமாக்கப்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கேகாலை – மாவனெல்ல பிரதேசத்தில் இதே போன்றதொரு சம்பவத்தை அடுத்து முஸ்லிம் நபர்கள் 09 பேர் வரை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க