உள்நாட்டு செய்திகள்புதியவை

ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது!

ரெயில் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்ததையடுத்து, ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

இராணுவம் மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

வேலைநிறுத்தம் காரணமாக பல ரெயில் நிலையங்கள் செயல்பாடற்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கடலோர புகையிரத பாதையின் காலி மற்றும் மாத்தறையிலிருந்து பயணித்த இரண்டு புகையிரதங்கள் இன்று காலை கோட்டை புகையிரத நிலையத்திற்கு சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க