உள்நாட்டு செய்திகள்புதியவை

ரெயில்வே ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு – விஷேட அரச பஸ்கள் சேவை

ரெயில்வே ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பை அடுத்து விஷேட அரச பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து பணியாளர்களது தொழிற்சங்க உறுப்பினர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் 2 தினங்களுக்கு பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நேற்று இரவு 7.00 மணி அளவிலேயே பல தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில், அரச பேருந்துக்களை சேவையில் ஈடுபடுத்தும் வகையில் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க