சினிமா

அதிர்ச்சியில் ‘கொலையுதிர்காலம்’ திரைப்படக்குழு

நயன்தாரா நடிப்பில் வெளிவரவுள்ள கொலையுதிர்காலம் திரைப்படத்தின் இந்தி படைப்பு தோல்வியடைந்துள்ள நிலையில் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

நயன்தாரா நடிப்பில் ஏற்கனவே திரைக்கு வந்த ‘மிஸ்டர் லோக்கல்’ படம் தோல்வியை தழுவியது. ஐரா பட வசூலும் திருப்தியாக இல்லை.

இதனால் அடுத்து திரைக்கு வரும் ‘கொலையுதிர் காலம்’ படத்தை பெரிதாக நம்பி இருந்தார்.

இதில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரதாப் போத்தன், பூமிகா ஆகியோரும் நடித்துள்ளனர்.

கொலையுதிர் காலம் இந்தியில் தமன்னா நடிக்க காமோஷி என்ற பெயரில் தயாரானது. ஆனால் காமோஷி ரசிகர்களிடம் வரவேற்பு பெறாமல் தோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில் தமிழில் எவ்வாறான வரவேற்பு கிடைக்கப்போகிறது என நயன்தாரா உட்பட பலரும் வருத்தமடைந்துள்ளார்.

கருத்து தெரிவிக்க