உள்நாட்டு செய்திகள்புதியவை

கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களில் பதற்றம்

கோட்டை மற்றும் மருதானை  ரயில் நிலையங்களில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ரயில்வே தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் இவ்வாறு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ரயில்வே தொழிற்சங்கங்களின் பணிபுறக்கணிப்பின் நிமித்தம் பல்வேறு ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் தபால் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் ரயில் சேவையினை பயன்படுத்தும் மக்கள் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளதுடன்பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் மற்றும் ரயில்வே தொழிற்சங்கங்களுக்கிடையே இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து பணிபுறக்கணிப்பு அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க