உள்நாட்டு செய்திகள்புதியவை

ரவி கருணாநாயக்க தம்பதியரை சீஐடியில் முன்னிலையாக உத்தரவு

அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அவரின் மனைவியை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கி முறி விற்பனை தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் பொய்யான சாட்சியம் அளித்த குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அவரது மனைவியை குற்றப்புலனாய்வுத்துறையில் வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு நீதிமன்ற நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

எதிர்வரும் ஜூலை 7ஆம் திகதி இந்த வாக்குமூலம் வழங்கப்படவேண்டும் என்று நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க