உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பேச்சுவார்த்தை தோல்வி: ரயில்வே தொழிற்சங்கங்கள் நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

நிதியமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையை அடுத்து ரயில்வே தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன.

ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகள் இதனை அறிவித்துள்ளனர்.

வேதன உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே பணியாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் 48 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவிருந்தனர்.

எனினும் இன்று நிதியமைச்சர் மங்கள சமரவீரவுடன் பேச்சுவார்த்தை ஒழுங்கு செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் இன்று பிற்பகல் வரை தமது தீர்மானத்தை ஒத்திவைத்திருந்தனர்.

இந்தநிலையில் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையால்  இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு இடம்பெறும் என்று ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

கருத்து தெரிவிக்க