சினிமா

பெண்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்-ஸ்ருதிஹாசன்

பெண்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து முன்னேறி போகவேண்டும் என நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

பெண்கள் தொடர்பான பேட்டி ஒன்றில் பேசிய போதே அவர் இதை தெரிவித்துள்ளார்.

எனக்கு தெரிந்த வரை நிறைய பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு இன்னொரு பெண்தான் காரணமாக இருக்கிறார். பெண்கள் எல்லோரும் ஒற்றுமையாகவும், இணக்கமாகவும் இல்லாததால்தான் இந்த சிக்கல்கள் எழுகின்றன.

லண்டனில் எனது இசைக்குழுவில் இருக்கும் எல்லோருமே பெண்கள்தான். பெண்கள் என்பதற்காக அந்த வேலையை அவர்களுக்கு கொடுக்கவில்லை. திறமையை பார்த்துத்தான் கொடுத்தேன்.
நான் எனது குழுவில் உள்ள பெண்கள் எல்லோரும் சேர்ந்து இருக்கிற சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறேன்.
அத்துடன் நான் சிறிய வயதில் இருந்தே திடமான பெண்ணாக வளர்ந்தேன் என அவர் கூறியிருக்கிறார்.

சிறிய இடை வெளிக்கு பிறகு ஜனநாதன் இயக்கும் ‘லாபம்’ படத்தில் மீண்டும் நடிக்க ஸ்ருதி ஒப்பந்தமாகி உள்ளார்.

கருத்து தெரிவிக்க