உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தீர்வுத்திட்டத்தை வலியுறுத்தி கூட்டமைப்பு பிரேரணை!

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை விரைவில் வழங்குமாறு வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்துவதற்கான பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவுள்ளது.

சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் இன்று (20) நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், தலைவர் சம்பந்தனால் மேற்படி யோசனை முன்வைக்கப்படும் என கூட்டமைப்பு எம்.பியொருவர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நாடாளுமன்றக் கட்டத்தொகுதியிலுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.

இதன்போதே இனப்பிரச்சினை விவகாரம் குறித்து சபையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இப்பிரேரணையை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க