உள்நாட்டு செய்திகள்புதியவை

ஐந்து பேரின் உயிரை காவு கொண்ட பாரிய விபத்து – சாரதிக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதியின், வெலிகந்த பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட வான் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தின் நீதவான் ரங்க தனுஸ்க ரத்நாயக்க முன்னிலையில் சாரதி ஆஜர்படுத்தப்பட்ட போது சாரதி அடுத்த மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 1.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மரதன்கடவல திருகொன்டியாடிமடு வீதியின் கொலக்கனவாடிய பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வெலிகந்த நோக்கி சென்றுகொண்டிருந்த டிரக் வாகனமொன்றும் அதே திசையில் பயணித்த வான் ஒன்றும் மோதியதாலேயே இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் டிரக் வண்டியில் பயணம் செய்த 5 பேரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 12 பேர் படுகாயமடைந்த நிலையில் கொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 4 பெண்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க