உள்நாட்டு செய்திகள்புதியவை

இயந்திர அரிவாள்களின் இறக்குமதியை நிறுத்த தீர்மானம்!

இயந்திர அரிவாள்களின் இறக்குமதியை நிறுத்துவது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நேற்று செவ்வாய்க்கிழமை குறித்த யோசனை முன்வைக்கப்பட்டது.

இதன்படி, 1969 முதலாம் இலக்க ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டு சட்டத்தைத் திருத்துவதற்கு உத்தேசித்துள்ளதாகவும் அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதற்கு இவை பயன்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் இதுவரை 82000க்கும் அதிகமான இயந்திர அரிவாள்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க