உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கல்முனை விடயம் – முஸ்லிம் அரசியல் தலைவர்களே தடுத்து நிறுத்தினர் என்கிறார் கருணா

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் விடயத்தை முஸ்லிம் அரசியல் தலைவர்களே தடுத்தி நிறுத்தினர் என முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்கள் முன்னெடுத்து வரும் உண்ணாவிரதப் போராட்டக்களத்திற்குச் சென்ற அவர், ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த பிரச்சினை நீண்டகால பிரச்சினையாக கிழக்கு மாகாணத்தில் இருந்து வருகிறது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கின்ற காலத்தில் இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, தீர்வினை வழங்க மஹிந்த ராஜபக்ஷ முன்வந்தார். கல்முனை பிரதேசத்தை வேறுபடுத்தி இனத்துவேசத்தை இதற்குள் கொண்டுவந்து எங்களை பிரிக்க நினைப்பார்களானால் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இதற்கு அரசாங்கம் தீர்வினை வழங்கவில்லையெனில் இலங்கை நாட்டில் முற்றுமுழுதாக போராட்டம் வெடிக்க வாய்ப்புள்ளது எனவும் கூறினார்.

கருத்து தெரிவிக்க