உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அரச புலனாய்வு பிரிவின் பிரதானி நாளை தெரிவுக்குழு முன்னிலையில்!

அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன நாளை வியாழக்கிழமை உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் பற்றி விசாரணை நடத்திவரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளார்.

இதற்கமைய நாளை பிற்பகல் 02 மணிக்கு அவர் முன்னிலையாகவுள்ளார்.

இதேவேளை இந்தத் தெரிவுக்குழுவானது, குற்றவியல் விசாரணைப் பிரிவின் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவதற்கு தீர்மானித்திருப்பதாக திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் எமது செய்திப் பிரிவுக்குத் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க