உள்நாட்டு செய்திகள்புதியவை

மட்டக்களப்பு பல்கலைக்கழக வங்கிக் கணக்கு குறித்து தகவல் கோரல்!

மட்டக்களப்பு பல்கலைக்கழக நிறுவனத்துக்கு சொந்தமான வங்கிக் கணக்கு தொடர்பிலான அனைத்துத் தகவல்களையும் வழங்குமாறு இலங்கை வங்கிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு, இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து குறித்த நிறுவனத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள நிதி தொடர்பிலான விசாரணைகளின் பொருட்டு இந்த தகவல்கள் கோரப்பட்டுள்ளன.

கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் ‘மட்டக்களப்பு பல்கலைக்கழக’ நிறுவனத்தின் வங்கி கொடுக்கல் வாங்கல்கள் உள்ளிட்ட அறிக்கையை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க