உள்நாட்டு செய்திகள்புதியவை

கிழக்கு மாகாணத்தில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு!

கல்முனையில் முன்னெடுக்கப்பட்டுவரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக் கோரி கடந்த திங்கட்கிழமை கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ.ஸ்ரீ.க.கு.சச்சிதானந்தம்சிவம் குருக்கள் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் நாளை வியாழக்கிழமை 20ஆம் திகதி கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடி உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண மாணவர் பேரவை துண்டுப்பிரசுரங்கள் மூலம் இதற்கான ஒத்துழைப்பை கோரியுள்ளது.

கருத்து தெரிவிக்க