உள்நாட்டு செய்திகள்புதியவை

ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி: சுதந்திர கட்சி

ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே போட்டியிடுவார் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவதை யாராலும் தடுக்க முடியாது எனவும் உறுதியாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புதிய கூட்டணி ஒன்றை அமைத்து அதனூடாக பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவது குறித்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், 6ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கான திகதி நேரம் என்பன அறிவிக்கப்பட்டும் இறுதி நேரத்தில் குறித்த பேச்சுவார்த்தை இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க