உள்நாட்டு செய்திகள்புதியவை

கோட்டாபய தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது!

கோட்டபாய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த மனு மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று செவ்வாய்க்கிழமை 18ஆம் திகதி நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்ட டீ.ஏ. ராஜபக்‌ஷ அருங்காட்சியக கட்டட நிர்மாணப்பணிகளின் போது மோசடிகள் இடம்பெற்றதாக கோட்டபாய ராஜபக்‌ஷ மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதனை விசாரிக்க மேல் நீதிமன்றத்தினால்  மூன்று நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவுக்கு எதிராக மேன் முறையீட்டு மனு ஒன்றை கோட்டபாய ராஜபக்‌ஷ தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க