உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து எந்த அறிவித்தலும் செய்யவேண்டாம்! – ரணில்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் குறித்து எவ்வித அறிவித்தலும் செய்யவேண்டாமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற போதே பிரதமர் தமது கட்சி உறுப்பினர்களிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகைள் குறித்தும் ஆழமாக ஆராயப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க