உள்நாட்டு செய்திகள்புதியவை

நாடாளுமன்ற விஷேட தெரிவுக் குழு முன்னிலையில் இன்றும் சிலர் சாட்சியம்!

நாடாளுமன்ற விஷேட தெரிவுக் குழு இன்று செவ்வாய்க்கிழமை 18ஆம் திகதி கூடவுள்ளது.

கடந்த ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராயும் வகையில் நாடாளுமன்ற விஷேட தெரிவுக்குழு உருவாக்கப்பட்டது.

இன்று பிற்பகல் 2 மணிக்கு கூட்டப்பட்டு வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக, அதன் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

இதன்போது, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி மற்றும் தற்போதைய பொறுப்பதிகாரி ஆகியோர் சாட்சிம் வழங்கவுள்ளனர்.

மேலும், சுஃபி முஸ்லிம் உறுப்பினர்கள் சிலரும் சாட்சி வழங்க அழைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க