உள்நாட்டு செய்திகள்புதியவை

பொதுவான ஆடை முறைமை அமுலாக்கப்பட வேண்டும்: தேசிய சங்க சம்மேளனம்

அரச நிறுவனங்கள் அனைத்திலும் அனைவருக்கும் பொதுவான ஆடை முறைமை அமுலாக்கப்பட வேண்டும் என தேசிய சங்க சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த சங்க சம்மேளனத்தின் தலைவர் லியன்வல ஷாசனரத்ன தேரர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் அரச சேவையாளர்களின் உத்தியோபூர்வ ஆடை தொடர்பான சுற்றுநிரூபத்தை மாற்றக்கூடாது என்றும் அவர் கூறினார்.

ஒரே நாடு ஒரே நீதி என்ற கொள்கை முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும். தனிப்பட்ட ஒரு இனத்துக்கு மாத்திரம் சிறப்புரிமை வழங்கப்படுவதால், இன்னொரு இனம் பாதிக்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அரைகாற்சட்டை அணிந்து வேறு ஒரு இனம் அரச நிறுவனங்களுக்கு பிரவேசித்தால் நாட்டின் கலாசாரம் மற்றும் கட்டமைப்பு என்னாவது? என்றும் லியன்வல ஷாசனரத்ன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்து தெரிவிக்க