சினிமா

பொலிஸ் பாத்திரத்தில் களமிறங்கும் சண்முக பாண்டியன்

சகாப்தம், மதுரவீரன் படத்தை தொடர்ந்து, சண்முக பாண்டியன் அடுத்ததாக தனது தந்தை வழியை பின்பற்றி புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

சகாப்தம் படம் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன். தற்போது புதிய படத்தில் பொலிஸாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

இந்த படத்தில் அவரது தந்தையின் படத்தை போலவே அதிரடி மற்றும் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலான காட்சிகள் அமையவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

பொலிஸ் திரைப்படங்கள் என்றாலே பெரும்பாலும் துரத்தல், பிடித்தல் என்ற வகையிலேயே இருக்கும், ஆனால் நாங்கள் மிகவும் யதார்த்தமான விதத்தில் சித்தரித்திக்கிறோம் என இந்த படத்தின் இயக்குனர் ஜி.பூபாலன் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க