வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்க விருந்து நிகழ்வில் துப்பாக்கிச்சூடு -ஒருவர் உயிரிழப்பு

அமெரிக்காவில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கான விருந்து நிகழ்வவொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பென்சில்வேனியா மாகாணம் பிலிடெல்பியா நகரில், நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற நிகழ்விலேயே இனம் தெரியாத நபரினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த நபர் திடீரென நிகழ்வுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தாக்குதலுக்கான பின்னணி தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க